பிரதான செய்திகள்

காட்சிப்படுத்தக் கூடாது! ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.

அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.


எந்தவொரு அரச அலுவலங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச அலுவலங்களில் அரச தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்சமயம் அனுராதபுரத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்து வனப்பகுதில் 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை

wpengine

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

wpengine

இந்துநோசியாவில் 6.6ரிச்டர் நீல நடுக்கம்! இலங்கை பாதிக்குமா?

wpengine