பிரதான செய்திகள்

கழிவு நீரை அகற்ற முடியாத முசலி பிரதேச சபை நிர்வாகம்! பிரதேச மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான பல கிராமங்களில் கழிவு நீர் அகற்றமுடியாமல் முசலி பிரதேச மக்கள் பல சிறமங்களை எதிர் நோக்கி வருகின்ற போது முசலி பிரதேச சபை இதுவரையில் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

மழை காரணமாக பல கிராங்களில் உள்ளக வீதிகளின் நீர் மட்டம் அதிகரித்து போக்குவரத்துக்கு தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

முசலி பிரதேச சபையில் கழிவு நீர்களை அகற்ற பல இயந்திரங்கள் இருந்தும் அதனை பிரதேச சபையின் நீர்வாகம் இது  வரையில் மேற்கொள்ளவில்லை என அறியமுடிகின்றன.

எனவே கழிவு நீர்களை அகற்ற முசலி பிரதேச சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது போன்ற கழிவு நீரை அகற்றும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மேற்கொண்டுவருகின்றார்.

இவ்வாறு முசலி பிரதேச சபையின் தவிசாளர்,உறுப்பினர்கள் ஏன் வாக்களித்த மக்களுக்கு சேவைகளை மேற்கொள்ள  முன்வருவதில்லை?

Related posts

விக்னேஸ்வரனின் கட்சி வடக்கில் ஒரு கொள்கை கிழக்கில் வேறு கொள்கை

wpengine

இரத்தினபுரி மக்களுக்கு 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட்

wpengine

முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக், மனைவி வௌிநாடு செல்ல தடை

wpengine