உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள்! நியுசிலாந்தில் சம்பவம் (காணொளி)

நியூசிலாந்தின் தெற்குத்தீவின் பெரும் கடற்கரையான பேர்வெல் ஸ்பிட்டில், பைலட் வகை திமிங்கலங்கள் 416, கரை ஒதுங்கி உயிருக்கு போராடுவது கண்டறியப்பட்டுள்ளது.

 

குறித்த சம்பவத்தில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 300 வரை இறந்துள்ளதாகவும், எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்களை காப்பாற்றுவதற்கு, விலங்குகள் நல பாதுகாப்புத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இருப்பினும் எஞ்சியுள்ள திமிங்கிலங்களும், உயிர் ஆபத்தை எதிர்கொண்டுள்ள கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேர்வெல் ஸ்பிலிட் கடற்கரையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழமையாக இடம்பெறும் நிகழ்வாகும். இருப்பினும் தற்போது நிகழ்ந்துள்ள உயிரிழப்பு சம்பவமே மிகவும் மோசமான நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சிறுபிள்ளைதனமான அரசியல் செய்கின்றது – அமீர் அலி

wpengine

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி!

Editor

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor