அரசியல்செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (21) கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடினார்.

மேற்படி கலந்துரையாடல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன் போது கம்பஹா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர் நாஸிக், மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யு. ஆதிக், வத்தளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் இக்பால் மற்றும் மினுவாங்கொடை இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சாவகச்ச்சேரி பிரதேச செயலாளர் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இன்று மரணம்.!

Maash

வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களில் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை.

Maash

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் துபாய்க்கு ?

Maash