பிரதான செய்திகள்

கந்தளாய் வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் கொள்ளை

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களில் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளன.

கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடம், மோட்டார் வாகனங்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த 5 வர்த்தக நிலையங்களில் இருந்தும் சுமார் 90 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் திருடப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வடக்கு ,கிழக்கில் 65,000 வீடுகள்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை

wpengine

பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்! வவுனியா,யாழ் வளாகம் மூடப்பட்டுள்ளது.

wpengine

புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டு , ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.

Maash