பிரதான செய்திகள்

கடிதங்களில் கையெழுத்திடவும், பதிலளிக்கவும் எனக்கு அமைச்சு பதவி தேவையில்லை-அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க

அமைச்சரவையில் வழங்கும் கடிதங்களில் கையெழுத்திடவும் அல்லது நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவும் மாத்திரம் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி தேவையில்லை என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க (C.B.Rathnayake) தெரிவித்துள்ளார்.

பணியாற்ற முடிந்தால், பணியாற்ற வேண்டும். வேலை செய்யும் போது காலை பிடித்து இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில நேரம் மக்கள் எம்மை நிராகரிக்கலாம். எமக்கு அமைச்சுக்களை கைவிட செல்ல வேண்டுமாயின் எந்த பிரச்சினைகளும் இல்லை. எனினும் நான் நுவரெலியா மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். முழு நாட்டு மக்களுக்கும் நான் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹிஸ்புல்லாஹ் கட்டிக்கொடுத்த நகர சபை கட்டடத்தை ஹாபீஸ் திறக்க திட்டம்! ஹிஸ்புல்லாஹ் காட்டம்

wpengine

இந்த சிறுமிக்கு உதவி செய்வோம்! 8லச்சம் தேவை

wpengine

அமைச்சர் றிஷாட்டின் வீட்டை முற்றுகையிட சதிதிட்டம்-அசாத் சாலி கண்டனம்

wpengine