செய்திகள்பிரதான செய்திகள்

கடந்த 10 நாட்களில் 1300 மில்லியன் வருமானம் ஈட்டிய இ.போ.ச

தேசிய போக்குவரத்து சபை, கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,300 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுள்ளதாக, தேசிய சபையின் போக்குவரத்து முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டில் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீள திரும்புவதற்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இதனால் எதிர்வரும் நாட்களில் இந்த வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக விசேட பஸ் சேவை இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், நாளாந்தம் கண்டி-கொழும்பு பாதையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 150 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து சபை போக்குவரத்து முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்தார்

Related posts

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில் சாணக்கியன்!

wpengine

இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை.!

Maash

தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

wpengine