தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் ஜனாதிபதியின் வாய்ப்பு

முப்படையில் சேவை புரிந்து தற்போது ஓய்வூதிய நிதிகளை பெற்றுவருவம் நபர்களுக்கு நாட்டுக்காக தொடர்ந்தும் சேவை புரிவதற்காக தேசிய அபிவிருத்திக் குழுவொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

காலியில் நேற்று  இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தாங்கள் விருப்பினால் மாத்திரம் குறித்த குழுவில் இணைந்து அரச நிறுவனங்களில் பணியாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மனித வளப்பற்றாக்குறைக்கு குறித்த நடவடிக்கை ஒரு நல்ல தீர்வாக அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

‘உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை அமைச்சர் ரிஷாட்

wpengine

மன்னார் -வங்காலை ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு: 5பேர் கைது

wpengine

யாழ் உதவி முகாமையாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்

wpengine