பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஐந்து கோடி ரூபா தருகின்றேன் தேர்தலில் போட்டியிட சீட்டு தாருங்கள்!அவலம்

வன்னி தேர்தலில் தொகுதியில் பொதுஜன பெரமூன கட்சியில் போட்டியிடுவதற்கு முசலி பிரதேசயின் முன்னால் தவிசாளர் எஹியா பாய் ஐந்து கோடி பணம் ரூபா தருவதாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ்சவுக்கு தூது அனுப்பி இருப்பதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளன.


இதற்கான தரகராக பேருவளையில் உள்ள  பொதுஜன பெரமூன கட்சியினை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரை தொடர்புகொண்டு எஹியா பாய் பேசி இருப்பதாகவும் அதற்காக முன்னால் பாராளுமன்ற உறுப்பினருக்கு  நாமல் ராஜபஷ்சவுக்கு ஐந்து கோடி ரூபா பணம் தருவதாகவும் எஹியா பாய் தூது அனுப்பியுள்ளார்.

ஐந்து கோடி ரூபா பணம் செலவு செய்து தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவை இந்த எஹியா பாய்க்கு என்ன காரணம் என சமூக சேவையாளர்கள் சிந்திக்கின்றார்கள்.


தேர்தலில் போட்டியிட்டு  5 கோடிகளை செலவு செய்கின்றவர்கள் வெற்றிபெற்றால் மக்களுக்கு சேவை செய்வார்களா? என சிந்திக்க வேண்டும்.

கடந்த இரண்டு மாதகாலமாக ஊடகங்களுக்கு பணங்களை கொடுத்து பொது ஜனபெரமூன கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்,முதன்மை வேட்பாளர் என போலியான பொய் பிரச்சாரங்களை முன்னேடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related posts

ஒலிம்பிக்கில் எமது நாடு பதக்கம் பெறவில்லை. விளையாட்டுத்துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன ? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்.

wpengine

வன்னியில் சிரமமின்றிய வெற்றியில் வெளிப்படும் றிஷாதின் ஆளுமையும், வெற்றிக்கு சாதகமாகும் களமும்

wpengine

ரணில் என்பவர் கல் விலாங்கு மீன் போன்றவர்! மஹிந்த கவலை

wpengine