பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், மக்கள் தெரிவு செய்யும் நபரையே பிரதமராக நியமிப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

பலமான நபர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் சஜித் தரப்பிற்கும், ரணில் தரப்பிற்கும் இடையில் முரண்பாடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

வடக்கு கிழக்கில் மனோ இல்லை! கொழும்பில் கூட்டமைப்பு அவுட்

wpengine

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine

நல்ல மனிதர்களை உருவாக்கும் தொழிற்சாலை பாடசாலை -எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine