பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், மக்கள் தெரிவு செய்யும் நபரையே பிரதமராக நியமிப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

பலமான நபர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பிரதமராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் சஜித் தரப்பிற்கும், ரணில் தரப்பிற்கும் இடையில் முரண்பாடான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இன்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

wpengine

சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் கோரிக்கை

wpengine

பெண்கள் வாட்ஸ்அப் தொல்லையிலிருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

wpengine