உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

எகிப்தின் முன்னால் ஜனாதிபதி முர்சிக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை

பல வழக்குகளை எதிர்கொண்டு வந்த எகிப்தின் முன்னாள் அதிபர் முகம்மது  முர்சிக்கு முதல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேல்முறையீட்டு நீதிமன்றம்.

2013ல் அதிபர் மாளிகைக்கு வெளியே தீவிரமான மோதலில் ஈடுபட்ட காரணத்திற்காக பதவிபறிக்கப்பட்ட இஸ்லாமியவாத தலைவரான  முர்சிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையை அளித்தது.

2013ல், நீதித்துறை பரிசீலனைக்கு அப்பாற்பட்டு தனது தீர்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முர்சி எடுத்த முடிவுகள் காரணமாக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள், எகிப்து ராணுவம், ஆட்சியைப் பிடிக்க தூண்டியது.

2011ல் முர்சி சிறையில் இருந்து தப்பித்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, அவரது வழக்கறிஞர்கள், மேல் முறையீடு செய்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் ..!

Maash

ஓட்டமாவடி புதிய பிரதேச செயலகம்! காணியினை பெற்றுக்கொடுத்த அமைச்சர் றிஷாட்; நன்றி தெரிவித்த அமீர் அலி

wpengine

மன்னாரில் காணமல்போன மனநோயாளி! பொலிஸ் முறைப்பாடு

wpengine