பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆசையா? விண்ணப்பிக்கலாம்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்களிடம் விண்ணப்பங்களை கோர அந்த கட்சி தீர்மானித்துள்ளது.

நாடு முழுவதில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்கு அமைய வேட்பாளர்களை தெரிவு செய்ய உள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் விண்ணப்பதாரிகள் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்திற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் அனைத்தும் பல கட்சிகளுடன் இணைந்து விரிவான கூட்டணியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

Related posts

ஒருத்தொகை போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது . .!

Maash

சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நன்மை கருதி மசாலா பொருட்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம்!

Editor

பம்பலப்பிட்டி மைதானத்தில் ரகர் விளையாட்டு போட்டி! பொலிஸ்மா அதிபர்,ரகர் சம்பியன் மஜித் பங்கேற்பு

wpengine