பிரதான செய்திகள்

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்படவுள்ளது.

ஜீ.எம். சரத் ஹேமச்சந்திர என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் நல்லூர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் பதவி உயர்வினை வழங்கியுள்ளார்.

உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவின் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.

அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவுக்கு கௌரவம் அளிக்கும் நோக்கில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

உயரம் பாய்தல்! அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் மாணவி இரண்டாம் இடம்.

wpengine

தாஜூதீனின் கொலை! மறைக்கப்படுமானால் வீதியில் இறங்குவோம்.

wpengine

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine