பிரதான செய்திகள்

உதய கம்மன்பில,முஸ்ஸமில் தொடர்பில் பெங்கமுவே நாலக தேரர் கருத்து

பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற இரண்டு ஊடக சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலையை மறைப்பதற்கு இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெவித ஹன்ட அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதி பெங்கமுவே நாலக தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் கைது செய்யப்பட்டமை, சுதேசத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சேபனை காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts

எனது தோல்விக்கு காரணம் சாராய போத்தல்கள் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ்

wpengine

இல்லங்கள் சேதமடைந்தததாக அரசாங்கத்திடம் கோடிகளை பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்கள்.

Maash

இடமாற்றங்களோ வேறு நடவடிக்கைகளோ மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது அமைச்சர் றிஷாட்

wpengine