பிரதான செய்திகள்

உதய கம்மன்பில,முஸ்ஸமில் தொடர்பில் பெங்கமுவே நாலக தேரர் கருத்து

பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற இரண்டு ஊடக சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலையை மறைப்பதற்கு இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெவித ஹன்ட அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதி பெங்கமுவே நாலக தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் கைது செய்யப்பட்டமை, சுதேசத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சேபனை காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

Maash

70 வருடங்களின் பின்பு திருமண சட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு இந்துக்களுக்கு அங்கிகாரம்

wpengine

கம்பஹாவில் பர்தாவுடன் தேர்வு எழுத மறுப்பு! தீர்வினை பெற்றுக்கொடுத்த ஹிதாயத் சத்தார்

wpengine