பிரதான செய்திகள்

உடல் எடையை குறைக்க முடியுமே! அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையால், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் எடையை மாத்திரமே குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையால் எதுவும் மாற்றமடைய போவதில்லை. அதற்காக அரசாங்கம் பீதியடைவதற்கும் ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று (30) கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த பாதயாத்திரையால் ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள போவதில்லை. இன்னும் 5 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் பிளவுப்பட போவதுமில்லை.

எனவே குறித்த பாதையாத்திரை தொடர்பில் பீதியடைவதற்கு ஒன்றும் இல்லையென தெரிவித்தார்.

Related posts

இலங்கையின் பொருளாதாரத்துறையில் புதிய திருப்பம் – இலங்கை – ஈரான் வர்த்தக கூட்டமைப்பில் ரிசாட் தெரிவிப்பு

wpengine

முச்சக்கர வண்டி மற்றும் எரிபொருள் பௌசர் விபத்தில் வைத்தியர் மரணம். – திருகோணமலையில் சம்பவம்.

Maash

காத்தான்குடி வைத்தியசாலையினை மத்திய அரசின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வாருங்கள் சபை அமர்வில் ஷிப்லி பாறுக் (விடியோ)

wpengine