பிரதான செய்திகள்

உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

மாகாண ஆளுனர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இன்றைய தினத்திற்குள் மாகாண ஆளுனர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆளுனர்களில் சில மாற்றங்களைச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார் என சில மாகாண ஆளுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் பதவியை ராஜினாமா செய்யுமாறு தமக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கில் வேலைவாய்ப்பு: வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Maash

பிக்கு ஒருவரின் சமூக வலைத்தள பதிவு! மாவனல்லைக்கு பாதுகாப்பு கொடுங்கள்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நன்றி தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்

wpengine