உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவை அறிவித்தார் பிரிட்டன் பிரதமர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான(donald trump) உக்ரைன் ஜனாதிபதியின் சேமாசமான சந்திப்பை அடுத்து “நாங்கள் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம்” என்று கூறி பிரிட்டன் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர்(Sir Keir Starmer) உக்ரைனுக்கு தனது “அசைக்க முடியாத ஆதரவை” வழங்கியுள்ளார்.

உக்ரைன் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாட இன்று ஞாயிற்றுக்கிழமை தலைவர்கள் சேர் கீர் ஸ்டார்மர் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைவார்கள், டொனால்ட் ட்ரம்புடனான அவரது பேரழிவுகரமான சந்திப்பைத் தொடர்ந்து அவர்கள் உக்ரைன் ஜனாதிபதியைச் சுற்றி அணி திரள்வார்கள்.

திருப்புமுனையில் இருக்கிறோம்
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையேயான கடுமையான சந்திப்பைத் தொடர்ந்து “நாங்கள் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம்” என்று கூறி சேர் கீர் ஸ்டார்மர் உக்ரைனுக்கு தனது “அசையாத ஆதரவை” வழங்கியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை டவுனிங் தெருவுக்கு ஜெலென்ஸ்கியை பிரதமர் வரவேற்றார், அங்கு வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதியுடனான அவரது மோசமான சந்திப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கான புதிய கடன் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சேர் கெய்ர், “உக்ரைனுக்கு எனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவேன், மேலும் நாட்டை “வலுவான நிலையில்” வைப்பதற்காக திறன், பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதற்கான எனது உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவேன்” என்று குறிப்பிட்டார்.

நாம் ஒன்றிணைய வேண்டிய நேரம்
ஜெலென்ஸ்கியை டவுனிங் தெருவிற்கு வரவேற்பது ஒரு ‘கௌரவம்’ என்று சேர் கெய்ர் கூறினார். “எங்கள் நட்பு நாடுகளுடன் கூட்டாக, அமெரிக்காவுடனான தொடர்ச்சியான விவாதங்களுடன், ஐரோப்பிய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான எங்கள் தயாரிப்புகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

“உக்ரைனில் அவர்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கு நாம் ஒன்றிணைய ஒரு வாய்ப்பு உள்ளது. “உக்ரைனுக்கு சிறந்த முடிவை உறுதி செய்வதற்கும், ஐரோப்பிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், நமது கூட்டு எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை உக்ரைனின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பிரித்தானிய அரசு 2.6 பில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவரான கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

ஜெலென்ஸ்கி புகழாரம்
சந்திப்பின் போது, போரின் ஆரம்பம் முதல் பிரித்தானியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். புதிதாக வழங்கப்பட்ட கடன் குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில்,

“இது கொள்கை அடிப்படையிலான ஆதரவின் வெளிப்பாடு” என்றார். இந்த நிதியானது உக்ரைனின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருவாயைப் பயன்படுத்தி இந்த கடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

Related posts

பிரித்தானியாவுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் ஒட்டம்

wpengine

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine

பதினெட்டே மாதங்களில் 31 கிலோ; அரிய நோயால் பாதிக்கப்பட்ட ‘யாகிஸ்’

wpengine