உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உகண்டா ஜனாதிபதி வீதியோரத்தில் தொலைபேசியில் உரையாடியது ஏன்?

உகண்­டாவின் ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலை­பேசி மூலம் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் “வைர­ஸாகி” வரு­கி­றது.

உகண்டா ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி கிராமப்­ புறத்­தி­லுள்ள வீதி­யொன்­றுக்கு அருகில் கதி­ரையில் அமர்ந்து தொலை­பே­சியில் உரை­யா­டு­வதும் சற்று தொலைவில் அவரின் வாகனத் தொட­ரணி காத்­திருப்பதும் அப்­பு­கைப்­ப­டத்தில் பதி­வா­கி­யுள்­ளது.

உகண்டா அர­சாங்க ஊட­கத்­துறை அதி­கா­ரி­யான டொன் வொனி­யாமா இப்­பு­கைப்­ப­டத்தை பேஸ்­புக்கில் வெளி­யிட்­டி­ருந்தார். சுமார் 30 நிமிட நேரம் ஜனா­தி­பதி முசே­வேனி தொலை­பே­சியில் உரை­யா­டி­னா­ரென வொனியாமா தெரிவித்துள்ளார்.

வாக­னத்­தி­லேயே அமர்ந்து உரை­யா­டாமல் எதற்­காக வீதி­யோ­ரத்தில் கதிரை போட்டு அமர்ந்து ஜனா­தி­பதி முசே­வேனி உரை­யா­டினார் என்­பது தெரி­ய­வில்லை.

ஆனால், இப்­பு­கைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பரவி வரு­கி­றது. ஜனா­தி­பதி முசே­வேனி தொலை­பே­சியில் உரை­யாடும் காட்­சியை வேறு பல புகைப்­ப­டங்­களில் பொருத்தி டுவிட்­டரில் பலர் வெளி­யிட்­டுள்­ளனர்.

71 வய­தான யோவேரி முசே­வேனி 5 ஆவது தட­வை­யா­கவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அமைச்சு பதவியில் மாற்றம்

wpengine

இரண்டு அரசாங்க ஊழியர்கள் காதல் விவகாரம்! தூக்கில் தொங்கிய ஜோடி

wpengine

அரசியலமைப்பை மாற்றியமைக்க சந்தர்ப்பமளிக்க மாட்டோம்!மெகொட அபேதிஸ்ஸ தேரர்

wpengine