செய்திகள்பிரதான செய்திகள்

இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமதி உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இன்று நாடு திரும்பியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் விசேட முனையத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில், திருமதி உலக அழகி போட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் சந்திமல் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேநானாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தென் ஆபிரிக்கா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கெய்லின் சாதனை முறியடிப்பு

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine

அரசாங்கத்தின் வேலை முஸ்லிம் பெண்களின் ஆடை,திருமண வயதெல்லையை மாற்றுதல்

wpengine