பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் இருவர்

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் போகுந்தர விவசாய சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடமையாற்றும் ஒருவரே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இவ்வாறு கைதாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

வயல் காணி ஒன்றை நிரப்பும் நடவடிக்கை தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க சந்தேகநபர் 20,000 ரூபாவை கோரியுள்ளார்.

இதில் 10,000 ரூபாவை பெற முற்பட்ட போதே இவரைக் கைதுசெய்துள்ளனர்.

இவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பஷிலின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைப்பு

wpengine

24மணி நேரம் அமைச்சர் றிஷாட் மீது அவதூறு பரப்ப குழு நியமனம்

wpengine

மேர்வின் சில்வாவின் மகன் மீதான தாக்குதல்! சீ.சீ.ரி.வி கமரா காட்சிகள் மீள பரிசோதனை

wpengine