பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலன்னறுவையில் கைது!

9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆசிரியர்களும்,அதிபர்களும் அரசியலுக்கு அடிபணிய வேண்டிய தேவையில்லை ஷிப்லி பாரூக்

wpengine

ஞானசார தேரருக்கு எதிரான 48 வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த கோரிக்கை: அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine

வடக்கு மக்களுக்கு காணியும், பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படவேண்டும்-அத்துரலியே ரத்தன தேரர்

wpengine