பிரதான செய்திகள்

இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்த நடவடிக்கை! -பிரதமர்-

தற்போதைய தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் மத்திய நிலையம் என்பது மாணவர்களுக்கு புதிய அறிவை தேடுவதற்குத் தேவையான ஒரு வளமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பீ.எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப மத்திய நிலையத்தை திறந்து வைத்துப் பேசும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

செல்வந்த மற்றும் வறிய நாடுகளுக்கு இடையில் வருமானத்தில் இடைவெளி இருப்பதைப் போல டிஜிட்டல் துறையிலும் இடைவெளி காணப்படுகிறது.

இலங்கையர்களின் டிஜிட்டல் அறிவை விருத்தி செய்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும். இதற்காக அரசாங்கம் பல வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இச் செயற்பாட்டில் தனியார் துறையின் ஒத்துழைப்பும் அவசியம் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

காலையில் பேஸ்புக் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன்

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு பலர் விசனம்

wpengine

எவரும் எங்கும் வாழ முடியும்! அவர்கள் விரும்பும் பிரதேசங்களில் வாக்காளர் பதிவுகளை சட்டத்திற்கு அமைய முடியும்.

wpengine