செய்திகள்பிரதான செய்திகள்

இரு பெண்களை தாக்கிய எருமை: காத்தான்குடி மக்களால் கட்டுப்பாட்டுக்குள்..!

எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இச் சம்பவம் நேற்று இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் காத்தான்குடி கடற்கரை பகுதியில் விரண்டு வந்த எருமை மாடு ஒன்று அங்கு நின்ற பெண் ஒருவரை குத்தி காயப்படுத்தி விட்டு, மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மிதித்து சேதப்படுத்தி உள்ளது.

அத்துடன் இந்த எருமை அப்றார் நகர் ஊடாகச் சென்று வீடு ஒன்றினுல் புகுந்து அங்கு இருந்த வயோதிப பெண் ஒருவரையும் குத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் மாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related posts

பௌத்த மதம் அப்படியே! பாதுகாக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

wpengine

பள்ளிவாசல் மீது பன்றி முட்டை தாக்குதல் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

wpengine

10 பங்காளி கட்சிகள் தனியாக செயற்பட விமல்,கம்பன்வில நடவடிக்கை

wpengine