பிரதான செய்திகள்

இன்றும் பெற்றோல் வினியோகம் தடை! நாளை இடம்பெறும்

அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை கருத்திற் கொண்டு நேற்று (08) இன்றும் (09) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு LIOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், திருகோணமலையில் உள்ள LIOC முனையம் திறந்திருக்கும் என்றும், அதிலிருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் மற்றும் அனைத்து தொழிற்துறைகளுக்கும் தடைஇன்றி தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) காலை முதல் மீண்டும் வழமை போல் தொடங்கும் என இலங்கையில் உள்ள LIOC நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

Related posts

யானைக்குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக தேரர் பிணையில் விடுதலை

wpengine

மாகாணத்திற்கு பெருமை சேர்த்த 18வயது வீரர்

wpengine

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

wpengine