பிரதான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 310 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது,.இதன்படி, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்திற்கு தெரிந்தும் ஏன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயருக்கு தெரிவிக்கவில்லை

wpengine

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, 4 பேர் பலி . !

Maash

20திருத்தம் மஹிந்த தலைமையில் கூட்டம்! ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கருத்து முரண்பாடு

wpengine