பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இந்தியா தடுப்பூசிகள் நாளை மன்னாருக்கு பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன்

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள், மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் (29) சுகாதார துறையினருக்கு செலுத்தப்படவுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

‘இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள், மன்னார் மாவட்டத்துக்கும்  வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1,280 கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் முதல் கட்டமாக,  சுகாதார துறையினருக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் 2 ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள், 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை சுற்றிவளைப்பதற்கு விசேட குழு

wpengine

வவுனியா- மாங்குளம் மற்றும் முதலியார்குளம் மக்களுக்கு ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

wpengine

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

Maash