பிரதான செய்திகள்

இணைக்குழு தலைவர் அலிஸாஹிர் மௌலானா

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நியமனக் கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையில் புதிதாக அவர் இணைத்தலைமை பதவிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

புதிய அரசமிப்பு! முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

wpengine

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சி, உற்பத்தியாளர்கள் சிரமம் .!

Maash

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

Editor