பிரதான செய்திகள்

இணைக்குழு தலைவர் அலிஸாஹிர் மௌலானா

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நியமனக் கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையில் புதிதாக அவர் இணைத்தலைமை பதவிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

400 பொலிஸ் நிலையங்கள்! ஆயுதமற்ற ஞானசார தேரரை ஏன் கைது செய்ய முடியவில்லை?

wpengine

அமைச்சரவை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்! யாழ் அதிபர்

wpengine

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Maash