பிரதான செய்திகள்

அரிசி பிளாஸ்டிக் அரிசி அல்ல! நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை

இறக்குமதி செய்யப்பட்ட அரசி பிளாஸ்டிக் அரிசி என மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தைக் கவனத்தில் கொண்டு நாடு முழுவதும் விற்பனை நிலையங்களில் அரிசி மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் போது செய்யப்பட்ட பரிசோதனையில் எந்த அரிசி மாதிரியிலும் பிளாஸ்டிக் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், இறக்குமதி செய்துள்ள அரிசியை பயன்படுத்த நுகர்வோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் திலக்கரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படமாட்டாது!

Editor

மைத்திரி – ரணில் கூட்டு அரசு! தூய அரசாக இல்லை

wpengine

முஸ்லிம் ஜனாஷாவை அடக்கம் செய்வதை கைவிடவேண்டும்.

wpengine