பிரதான செய்திகள்

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்! அரசு அடக்கம்

நாட்டின் பல பாகங்களில் புதிய ​சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளமையை இட்டு ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி அடைந்துள்ளது.

கொழும்பில் இன்று (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருந்த நிலையிலேயே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அவசரமாக, புதிதாக சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான தேசிய அச்சுறுத்தல்தான் என்னவென ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கொழும்புக்கு வரும் தனியார் பஸ்கள் அனைத்தும், சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவ்வாறான சோதனைச் சாவடிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

முறிந்த நிலையில் மின் கம்பம்! பிரதேச மக்கள் விசனம்

wpengine

ஜனாதிபதி, அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனித்து சிறை வைக்கப்பட்டுள்ளார்.

wpengine

அரச சம்பளத் தொகையில் அரைவாசி இராணுவத்திற்கே; பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

Editor