பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கல்! நீதி மன்றம் செல்லும் பொன்சேக்கா

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அதிகாரமற்றதாக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (09) ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வூப்பெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன, உறுப்பினர்களான சந்ரசிறி ஜயதிலக மற்றும் சந்ரா பெர்ணான்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களுடன் சேர்த்து சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுக்களுக்கு ´பொறுப்பு கூற வேண்டியவராக´ தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரத் பொன்சேக்கா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்த விதம் முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள சரத் பொன்சேக்கா, தமக்கு வழங்கப்பட்ட கடமைகளுக்கு அப்பால் சென்று ஆணைக்குழு செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

wpengine

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

wpengine

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா -மஹிந்த

wpengine