பிரதான செய்திகள்

அரசியல் செல்வாக்கில் 10 வருடத்திற்கு மேல் அரச உத்தியோகத்தர்கள் வவுனியாவில்

வவுனியா மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் பலருக்கும் அரச சுற்றுநிரூபத்திற்கு அமைவாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இடமாற்றம் கிடைத்துள்ள உத்தியோகத்தர்கள் பலரும் இடமாற்றத்தை ஏற்று வேறு இடங்களுக்கு செல்லாது தமது அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்தும் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்ற முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு பூராகவும் அரச உத்தியோகத்தர்களுக்கு அரச பொதுக்கொள்கை அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் பலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

அழிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு முசலி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

wpengine

யாழ். விவகாரம்!மாநாட்டிலிருந்து ​அமைச்சர் வெளியேறினார்.

wpengine