பிரதான செய்திகள்

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


தொடங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான வீழ்ச்சியடைந்துள்ளதுடன் திறைசேரியின் கஜானா கலியாகியுள்ளது.


கொரோனா தொற்றி மக்கள் சாகமல் செத்துமடியும் மக்களின் வயிற்றில் அடித்துள்ள அரசாங்கம், குடிநீர், தொலைபேசி கட்டணம் உட்பட அனைத்தையும் அதிகரித்துள்ளது.


இந்த அரசாங்கத்திற்கு அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்ததால், மக்களிடம் இருந்து வெட்டுவதற்கு எதுவும் இருக்காது எனவும் குமார வெல்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தின் கல்விக் கௌரவிப்பு விழா 2017

wpengine

எருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் பொதுபல சேனா

wpengine