பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிங்கள அடிப்படைவாதிகளின் கடும் தாக்குதல்

நிலைப்பாடு ஒன்றை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் எவரும் அடிப்படைவாதியாக ஆகிவிட மாட்டார்கள் என நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.


அத்துடன் நெஞ்சை புடைத்து கொண்டு கத்துவதால் மாத்திரம் எவரும் தேசப்பற்றாளர்களாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.


சிறுபான்மை என்பதால் மாத்திரம் நிலைப்பாடு போலியானது அல்ல. பெரும்பான்மை என்பதால் மட்டும் நிலைப்பாடு சரியாக இருக்காது.


நிலைப்பாடு ஒன்றை வெளியிடுவதால் எவரும் அடிப்படைவாதியல்ல. நெஞ்சு புடைக்க கத்துவதால் மாத்திரம் எவரும் தேசப்பற்றாளராக இருக்க மாட்டார் என நீதியமைச்சர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தன் காரணமாக நீதியமைச்சர், தற்போது அரசாங்கத்திற்குள் இருக்கும் சிங்கள அடிப்படைவாதிகளின் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மறிச்சுக்கட்டிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டுகின்றது. மூவர் கொண்ட குழு நியமிக்க ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

wpengine

பேசாலையில் துறைமுகம் : கடற்படையினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்படுமா? நேற்று இடம்பெற்ற மீனவர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

Maash

பொருளாதார நெருக்கடியை மேம்படுத்த 90 கோடி அமெரிக்க டொலர் இலங்கைக்கு.

Maash