பிரதான செய்திகள்

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாரை மாவட்ட சமூக சேவை அமைப்பான அட்சோ (ADDSO) நிறுவனத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் அம்பாரை மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடராக நடத்தப்பட்டு வருகின்றன.

வரையறுக்கப்பட்ட அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு அமைப்பின் தலைவர் ஏ. ஆர். எம். ஜிப்ரி  மற்றும் கந்தளாய் றியாஸ் முஹம்மட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு நடத்தப்பட்டுவரும் இந்த இலவச கருத்தரங்குகளில் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் சாலையில் வரிசையில் நிற்கும் போது, கடலில் கப்பல்கள் வரிசையாக நின்றன.

Maash

இலங்கையில் மீண்டும் பரவி வரும் மலேரியா குறித்து அறிவுறுத்தல்!

Editor

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினருக்கும் மு.கா.கட்சிக்கும் தொடர்பில்லை

wpengine