பிரதான செய்திகள்

அமைதியான முறையில் போராடும் வரையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது-சவேந்திர சில்வா

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறும் வழியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மக்கள் அமைதியாக இருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  அனைவரும்  அதனை மதித்து வாழ வேண்டும். அமைதியான முறையில் போராடும் வரையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அமைதியான முறையில் இருந்து  வன்முறை நிலைக்கு மாறினால் பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

Related posts

வவுனியா நீர்ப்பாசன கழிவு வாய்க்கால்களை புனரமைக்க கோரிக்கை

wpengine

முல்லைத்தீவு வைத்தியசாலையினால் பாதிக்கப்படும் மக்கள்! பலர் விசனம்

wpengine

“சமூக ஒற்றுமைக்கு வழிபேனுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine