பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் சில சிங்களவாதிகள் அழுத்தம்

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இவ்வாறான நிலையில் தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் ரிசாத்துக்கு எதிராக மக்கள் பாரியளவிலான பதாதைகள் வைத்துள்ளனர்.

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதராவாக வாக்களிக்காமல் மீண்டும் ஊருக்கு வர வேண்டாம் என அந்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.

Related posts

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரிப்பு..!

Maash

கல்விக்கு கைகொடுத்தோர் என்றுமே போற்றப்படுகிறார்கள் வெள்ளவத்தை நிகழ்வில் அமைச்சர் றிஷாட்

wpengine

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை வழமைக்கு திரும்பி நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும்.

wpengine