பிரதான செய்திகள்

அமைச்சரவை கூட்டம்! மஹிந்த மந்திர ஆலோசனை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ள நிலையில், தற்போது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றின் நிலைப்பாடு வெளியாகியுள்ள நிலையில், நாளைய தினம் நாடாளுமன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சற்று முன்னர் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவும், கட்சி முக்கியஸ்தர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், மைத்திரி – மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தற்போது முக்கிய ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

Related posts

மும்மண்ன பாடசாலை மைதான இழுபறிக்குத் தீர்வு குருனாகல் மாவட்ட இணைப்பாளர் அசார்தீன்

wpengine

மீள்குடியேற்ற செயலணியினை குறைகூறும் முதலமைச்சர்

wpengine

ஜனாதிபதி தேர்தலுக்காக 41 பேர் கட்டுப்பணம்! இறுதியாக ஹிஸ்புல்லாஹ்,சிவாஜிலிங்கம்

wpengine