உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

 

எனினும் மக்களின் செல்பீ ஆர்வம் குறையவில்லை.
இந்நிலையில், அமெரிக்க, புளோரிடா மாநிலத்தின்  சுகர் லேண்ட் எனும் நகரில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் இருவர் சிரித்தவாறு செல் லிடத் தொலைபேசி மூலம் தம்மை படம்பிடித்துக் கொள்வதைப் போன்று இச் சிலை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.

நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நகர சபை அதிகாரிகளால் இச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், இச் சிலை குறித்து உள்ளூர் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 

Related posts

1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களையும் பற்றியும் பேசுங்கள்

wpengine

காணியினை சுவிகரிக்க கத்தோலிக்க சிலை அமைத்த அரிப்பு மக்கள்! வெள்ளிமலை மக்கள் கண்டனம்

wpengine

கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

wpengine