உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

 

எனினும் மக்களின் செல்பீ ஆர்வம் குறையவில்லை.
இந்நிலையில், அமெரிக்க, புளோரிடா மாநிலத்தின்  சுகர் லேண்ட் எனும் நகரில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் இருவர் சிரித்தவாறு செல் லிடத் தொலைபேசி மூலம் தம்மை படம்பிடித்துக் கொள்வதைப் போன்று இச் சிலை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.

நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நகர சபை அதிகாரிகளால் இச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், இச் சிலை குறித்து உள்ளூர் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 

Related posts

எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்து மீண்டும் ஒரு மரணம்

wpengine

காலக் கழிகைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள்; – தமிழ் தேசியத்தின் கடும், மென் போக்குகளில் எது கைகூடும்?

wpengine

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

wpengine