பிரதான செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி உருவாக்கம்

அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலமையை மேலும் முகாமை செய்வதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப்படி இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

சேதமடைந்த வீடுகள், தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், சுகாதார பிரச்சினைகள், ஆபத்தான இடங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றல் போன்றவற்றை திட்டமிடுவது இந்த செயலணியின் நோக்கமாகும்.

Related posts

சம்மாந்துறை சுகாதார அதிகாரிகளினால் சோதனை- சிக்கிய , உணவகங்கள் மற்றும் இறைச்சி கடை !

Maash

இங்கிலாந்துடன் அரையிறுதியில் இணையும் பாக்கிஸ்தான்

wpengine

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine