பிரதான செய்திகள்

அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக் கழகத்திற்கு உதவித்திட்டம்.

மன்னார் அடம்பன் பாலைக்குளி  டிலாசால் விளையாட்டுக்கழகம் தமது உதைபந்தாட்ட அணியின் வீரர்களது பயன்பாட்டிற்காக உதைபந்தாட்ட பாதணிகள் மற்றும் பயிற்சிகளுக்கு பயன்படுத்தும் பாதணிகள் போன்றவற்றை கொள்வனவு செய்து தருமாறு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கோரியிருந்த சந்தர்ப்பத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தின் விளையாட்டு வீரர்களும், கழகமும் வளர்க்கப்படவேண்டும் என்ற நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ரூபாய் 50,000 நிதியை ஒதுக்கி குறித்த கழகத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து குறித்த கழகத்தின் தலைவர் பி.நிலாளன் மற்றும் கழக உறுப்பினர்களிடமும் கையளிக்கும் நிகழ்வு 11-12-2016 ஞாயிறு நண்பகல் 12:30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

Related posts

200 ஊடகவியலாளா்கள் வடக்கு நோக்கி பிரயாணம் இன்று ஆரம்பம்

wpengine

மொஹிதீனின் சமூகப் பணிகள் வரலாறுள்ளவரை அவரை ஞாபகமூட்டும்! றிஷாட்

wpengine

வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெறும் ஆதரவின் ஊடாக சஜித் பிரேமதாச, கோத்தபாயவை பின்தள்ளி முன்னிலை வகிப்பார்

wpengine