பிரதான செய்திகள்

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான முறைப்பாடு தள்ளுபடி!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் தனிப்பட்ட முறைப்பாட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய காலத்தில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல வழக்கை நிராகரித்தார்.

தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட், முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான தகவல்கள் புகார்தாரரால் முன்வைக்கப்படவில்லை என்றார்.

2014ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சரவையின் அனுமதியின்றி ஐஎஸ் பயங்கரவாதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு தின நிகழ்வு!

wpengine

தமிழ், முஸ்லிம் உறவுகளின் விரிசல் அபாயகரமானது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

wpengine

கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!!!

Maash