பிரதான செய்திகள்

அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான மணற்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட சாகுல் ஹமீது முஹம்மட் வாஜித் அகில இலங்கை சமாதான நீதவனாக நேற்று (10) காலை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் உயர் தர கல்வியினை குருநாகல் மதீனா தேசிய பாடசாலையிலும்,தற்போது இலங்கைக்கான தஞ்சாவூர் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டு வருகின்றார்.

அத்துடன் முசலி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றிவருகின்றார்.

மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்த மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர்!

Editor

கொரோனா பரவல் – மூடப்படும் தாஜ்மஹால்!

wpengine

ரணில்,சம்பந்தன் எப்படி ஆட்சி அமைப்பார்கள்! ஆவலாக இருக்கின்றேன் மஹிந்த

wpengine