வடக்கில் முன்னெடுக்கும், மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்.
உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது.
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
உலக வங்கியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்…






