பிரதான செய்திகள்

QR முறை மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளது.

QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான மாதாந்த செலவு 500 மில்லியன் டொலர்களில் இருந்து 230 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள மக்களுக்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத் திட்டத்தை வழங்குவதைத் தவிர, QR முறையானது தேசிய சேமிப்பிற்கும் வழிவகுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆறு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் தற்போது தேசிய எரிபொருள் உரிமத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடு  முழுவதும் உள்ள 93% எரிபொருள் நிலையங்கள் இந்த QR முறையைப் பயன்படுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக முடக்குவதற்கு அரசாங்கம்

wpengine

கிழக்கு முனையம் இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் இந்தியா சீட்டம்

wpengine

மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine