உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ISIS தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்குண்டு -அமெரிக்க அதிபர் ஒபாமா

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.

 

அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில், ”ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறவர்கள் அமெரிக்க முஸ்லிம்கள் தான். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அதிகளவில் பங்காற்றியிருக்கிறார்கள்.

முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். இது அமெரிக்காவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றுக்கு எதிரானதாகவும், அமெரிக்காவில் மதசுதந்திரம் உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் பேச்சாகவும் உள்ளது” என்றார்.

Related posts

போர்வீர சேவைகள் அதிகார சபையினால் மட்டு-அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் விஷேட நிகழ்வு மட்டக்களப்பில்- அனோமா பொன்சேக்கா

wpengine

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine

உயர் இரத்த அழுத்தத்தால் மூன்றில் ஒரு பெரியவர் பாதிப்பு .

Maash