பிரதான செய்திகள்விளையாட்டு

IPL இல் ஏலம் இன்றி வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை –விராத் கோலி 33 கோடி, மலிங்க 17 கோடி

IPL போட்டிகளில் ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை இதற்கு முன்னர் இந்திய கிரிகெட் நிர்வாக சபை வெளியிடவில்லை.

என்றாலும் இந்திய கிரிகெட் நிர்வாக சபைக்கு சஷாங் மனோகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த கொள்களையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய ஏலம் இன்றி அணியில் தக்க வைத்துக்கொள்வதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகளுக்கு அமைய கூடுதலான தொகை வழங்கப்படும் வீரராக விராத் கோலி காணப்படுகிறார். அவருக்கு ஒரு தொடருக்காக இலங்கை ரூபாய்களுக்கு அமைய 33 கோடி வழங்கப்படுகிறது.

இலங்கை கிரிகெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு ஒரு தொடருக்காக 17 கோடி வழங்கப்படுகிறது.
IPL முன்னணி வீரர்கள் சிலருக்கு வழங்கப்படும் தொகைகள்

01. விராத் கோலி – 33 கோடி
02. சேகர் தவான் – 27.5 கோடி
03. எம்.எஸ். தோணி – 27.5 கோடி
04. ரோஹித் சர்மா – 25.3 கோடி
05. கௌதம் கம்பீர் – 22 கோடி
06. கரன் பொலாட் – 21.3 கோடி
07. AB டி விலியஸ் – 20.9 கோடி
08. கிறிஸ் கெயில் – 18.4 கோடி
09. லசித் மாலிங்க – 17.8 கோடி
10. சுனில் நாராயன் – 17.6 கோடி
11. ரவி அஷ்வின் – 16.5 கோடி
12. டறவன் பிராவோ – 8.8 கோடி
13. ஸ்டீவ் ஸ்மித் – 8.8 கோடி

Related posts

முன்னாள் அமைச்சருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! இ.சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine

ஜனாதிபதி ரணில் விரைவில் வெளிநாட்டு பயணம்! கடன் தொடர்பில்

wpengine

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர்- அமைச்சர் றிசாட்

wpengine