Breaking
Sat. Apr 20th, 2024

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா திடீர் மரணம் அடைந்ததை தொடர்ந்து,  புதிய தலைவராக ஷசாங் மனோகர் கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) தலைவராகவும் ஷசாங் மனோகர் இருந்து வருவதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *