முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சேங் ஹொங்க் இடையில் நேற்று சந்திப்பொன்று நடந்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு முன்னாள் பிரதமர், சீனத் தூதுவரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையர்களால் சவால்களை எதிர்கொள்ள முடிந்துள்ளமை குறித்து சீனத் தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் நீண்டகாலம் செல்லும் முன்னர் இந்த கஷ்டமான காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் கூறியுள்ளார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *