வடக்கு கிழக்கில் உள்ள பிக்குகளுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி அவர்களை தன்பக்கம் இழுக்கும் செயற்பாட்டினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னெடுத்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அமைச்சர் ரிஷாதுக்கு மிக நெருக்கமான ஒரு வர்த்தகர் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த
நடவடிக்கை வடக்கு கிழக்கு பிக்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்
மேற்கொள்ளும் ஒரு யுக்தி என குறிப்பிட்டுள்ள.

அவ்வமைப்பு ஊடகங்கள் வரும் ஏப்ரல் 10ம் திகதி இடம்பெறவுள்ள வைத்திய முகாமில் கலந்து கொள்ளும் பிக்குகளுக்கு இலவச மருத்துவ சேவை மற்றும் பத்தாயிரம் ரூபா பணமும் வழங்கப்படவுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியா ரஜமஹா விகாரை விஹாராதிபதி அவர்கள் அமைச்சருக்கு மிக நெருக்கமானவர் எனவும் அவர் ஊடாக வட் க்கு கிழக்கு விகாரைகளுக்கு ஒருலட்சம் பணம் அன்பளிப்பு செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *