அக்கட்சி ஊழலுக்கு துணைபோகிறது எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே தான் அம்னோவிலிருந்து பதவி விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதிமோசடிகளில் சிக்கியுள்ள பிரதமர் நஜீப் ரசாக்கின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் கட்சியுடன் தான் தொடர்புபட்டிருக்க முடியாது என டாக்டர் மஹாத்தீர் கூறியுள்ளார்.

நஜீப் அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு சுமார் 700 மில்லியன் டாலர்கள் நிதி வந்தது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த ஊழல் தடுப்பு அதிகாரிகள், அக்குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தனர்.

பெரும் தொகையான அந்தப் பணம், சவுதி அரச குடும்பத்திலிருந்து கிடைத்த நன்கொடை எனக் கூறி அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டனர்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *